கடவுள் உங்கள் கண்ணுக்குத் தெரிவார்..!


எங்கே கடவுள்..?
எங்கும் இருக்கிறார் என்பது நீண்ட காலமாய்
கேள்விப் பட்ட செய்திதான்!
எங்கும் என்றால்..?
தூணிலும்.. துரும்பிலும்..!
இதுவும் அறிவோம் நாம்..!
எங்கும் என்றால்..
எனக்குள்ளுமிருக்கிறான் இல்லையா
என்று நாம் கேட்டுப் பார்த்ததில்லை !
எங்கும் என்றால்
அவனுக்குள்ளும் இருக்கிறான் இல்லையா
என்றும் நாம் கேட்டுப் பார்த்ததில்லை!
எனக்குள் அவனுக்குள் இருந்தால்
எல்லாருமே கடவுள் இல்லையா
என்றும் நாம் சிந்தித்ததில்லை!
இப்படி ஒரு சத்விசாரத்தில் இறங்கிப் பாருங்கள் ..
கண்டிப்பாகக்..
கடவுள் உங்கள்
கண்ணுக்குத் தெரிவார்!

Comments

Popular posts from this blog

ஆயத்தம் செய்வோமா..?

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா