Posts

Showing posts from November 13, 2011

பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!

Image
புலால் உண்பது பொறிகளை அழிக்கும்! புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்! தாவர உணவே சாத்வீக உணவு! அதுவே இயற்கையாய் அமைந்த உணவு ! ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு! ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால் தழைத்து வளரும் தாவரங்க ளான மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும் உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே ! தாவர உயிர்கள் தம்மை அழித்து நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும் அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய் ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..? ஜீவ காருண்யம் என்று பார்த்தால் தாவ ரங்களை அழிப்பதும் பாவம்! தாவ ரங்களை உண்பதும் பாவம் ! என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா! இல்லை என்கிறார் எம்பெரு மானார்! ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும் ஜீவ விளக்கம் உண்டென் றாலும் பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள் தழைகள் கீரைகள் வித்துகள் யாவும் உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி அவைகளே உயிராய்க் காண்பது இல்லை! அவற்றில் தனியாய் உயிரும் இல்லை! மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால் அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்

ஆயத்தம் செய்வோமா..?

Image
ஒரு மனிதர்.. ஒரு மாமனிதர் .. உடம்போடு உள் நுழைந்து மறைந்த  ஓரிடம்... தமிழ்நாட்டில் தான்  உள்ளது..!  அவ்விடம்.... பெருமான் திருவறைக்குள்.. திருக்காப்பிட்டுக் கொண்டு ஜோதிமயமாய் இறைவனோடு இரண்டறக் கலந்து.. ஞான சித்தி பெற்ற.. சித்தி வளாகம் ஆகும்! சித்தி வளாகத்தைச் சித்தத்தால் தொழுது சிந்தனையை முறைப்படுத்தினால்.. ஆன்ம ஒளி நமக்கு அறிமுகமாகும்..! அறிமுகம் நம்மைப் புதுமுகம் ஆக்கும்! ஆயத்தம் செய்வோமா..? 

அவரைப் பின்பற்றுவோம்..!

Image
மும்மொழிப் பாடசாலை...தமிழ்  நாட்டில்  முதன்முதலில் ஏற்படுத்தியவர் ... முதியோர் கல்வியை முதன்முதலில்  ஏற்படுத்தியவர்...   முற்போக்குச்  சிந்தனையின்  மூல புருஷராக விளங்கிய  முத்தமிழ்   ஞானி..  வள்ளல் பெருமான் என்பதை நினைக்கையில்  இதயமெலாம் பூரிப்பும்  புத்துணர்வும் எழுகிறது! அதே சமயம் --- அவரைப்    பின்பற்றுவதில்  எவ்வளவு பின்தங்கி விட்டோம்  நாமென்று நினைக்கையில்  வேதனை நெஞ்சை விழுங்குகிறது! அவரைப் போன்ற சீர்திருத்தவாதி  ஆருமில்லை  அவர்தம் நூற்றாண்டில்! அகிலம் கண்விழிக்க  அவரைப் பின்பற்றுவோம்..!     

ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்..?

ஒரு  நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளல் பெருமான்  ஒரு வரையறை செய்கிறார்.. ஒவ்வொரு ஆட்சியாளரும்  இந்த  வரைமுறை பற்றி  ஒருமுறையேனும் சிந்தித்தால்.. மாபெரும் மாற்றங்கள் மலரும்! மனம் வைப்பார்களா  மனிதர்கள் என்பதுதான்  மகத்தான  கேள்வியாக இருக்கிறது..! பெருமான் பகர்கிறார்: ஒரு நாட்டில்.. பறிபடுவது...பூவாக இருக்கவேண்டும்..!  சிறைப் படுவது..புனலாக இருக்கவேண்டும்..!  அலைபடுவது.. காற்றாக..இருக்கவேண்டும்..!  கடினம் உடையது.. கல்லாக இருக்கவேண்டும்..!  வடுப் படுவது..மாவாக (மாமரமாக) இருக்கவேண்டும்..!  குலைப் படுவது.. வாழையாக..இருக்கவேண்டும்..!  மதுவுண்பது..வண்டாக இருக்கவேண்டும்..!  அடிபடுவது பந்தாக..இருக்கவேண்டும்..!  கட்டிக் கிடந்து உண்பது..பரியாக (குதிரையாக)..இருக்கவேண்டும்..!  குத்துப் படுவது.. நெல்லாக இருக்கவேண்டும்..!  போரில் படுவது..நெற்கதிராக   இருக்கவேண்டும்..!   வலை படுவது..வயலாக இருக்கவேண்டும்..!  குறைபடுவது..மாதர் இடையாக இருக்கவேண்டும்..!  தரித்திரமே ..தரித்திரப்படுவதாக  இருக்கவேண்டும்..!  துக்கமே ..துக்கப் படுவதாக இருக்கவேண்டும்..!  பொய

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

Image
திருவருட்  பிரகாச   வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக... திருவருட்  பிரகாச   வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக...    அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் மரக் கன்று நடுகிறார் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் திருமிகு. எஸ் .பவுன் ராஜ் அவர்கள்  அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் உள்ளூர்ப் பள்ளியில் மரக் கன்று நட்டு நீரூற்றுகிறார் கங்கை மணிமாறன் 

சகல துன்பங்களுக்கும் சரியான காரணம்...

Image
 அன்னதானத்தில் சில காட்சிகள்  உலகத்  துன்பங்களுக்கு  எல்லாம் உண்மையான காரணம் எது என்று உலக ஞானிகள் ஒவ்வொருவரும் உயிரைப் பிசைந்து ஆராய்ச்சி செய்தார்கள்! சகல   துன்பங்களுக்கும் சரியான காரணம்... ஆசையே என்று அனைவரும் முடிவு சொன்னார்கள்! ஆசையே துன்பங்களுக்குக் காரணம் அதை விட்டொழியுங்கள் என்று உயிர்வலிக்க உபதேசித்தார்கள்! வள்ளலார் அதை மறுக்கவில்லை! உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறார்! ஆனால்..அதே சமயம் அதைவிட அழுத்தமான .. அடிப்படையான காரணம் ஒன்று உண்டு என்று கண்டுபிடிக்கிறார் பெருமான்! சகல   துன்பங்களுக்கும் சரியான காரணம்... அதுதான் பசி என்பது! பசிதான் படரும் துன்பங்களுக்கு எல்லாம்.... தொடரும் கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் என்று பெருமான் அழுத்தமாய் நம்பினார். ஆசையற்றவர்கள் அகிலத்தில் உண்டு! பாரில் எங்கும் பசியற்றவர்கள் உண்டா! அப்பர் பெருமானுக்கு ஆசை இல்லை! ஆனால்.. பசி இருந்தது! ஆண்டவனே கட்டுச் சோறு கொண்டு வந்தான்! சுந்தரருக்கு ஆசை இல்லை! ஆனால் பசி இருந்தது! ஆண்டவனே பிச்சை ஏற்று  வந்து ஊட்டினான்! பட்டினத்தாருக்கு ஆசை இல்லை! பசி இருந்தது! என் பசிக்கு  

அருளாளர் பண்பு!

Image
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்  அறிஞருள் அறிஞர் வள்ளுவனார்! கைகளை வீசி நடக்கவும் பயந்து  கைகளைக் கட்டியே நடந்த பெருமான்  அடக்கத்தின் பேருருவமாகத் திகழ்ந்தவர்! கருங்குழியில் அவர் வதிந்த போது, தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதம் நிகழ்ந்தது! அடியார்கள் அந்த அருட்திறத்தில்   நெகிழ்ந்து  பெருமானை வியந்து போற்றத் தொடங்கினர்.  எம்பெருமானோ..இவ்வாறு பாடினார்! "நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது : சந்நிதியின் முன்னே    ..!"  நெய் விளக்கு என்னால் ..என் அருட் திறத்தால் ..எரியவில்லை! அது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் .. அவர் சந்நிதியின் முன்னே எரிந்தது! ---என்பதை  அழுத்தமாய் எடுத்துக் காட்டுகிறார் பெருமான்!  என்னே அவர்தம் அடக்கம்!  தன்னை வியத்தல் என்பது மனிதப் பண்பு!   தன்னை மறத்தல் தானே ..அருளாளர் பண்பு!

நல்லவர்களே ..வாருங்கள்!

Image
கடவுளை  அனுபவமாகப்  பார்த்தவர்  வள்ளலார். அனுபவித்துப் பார்த்தவர் வள்ளலார். அனைத்து உயிர்களிலும் பார்த்தவர் வள்ளளார்! ஊதிப் பழுத்த கனியன்று: நிழல் கனிந்த கனி என்று இயற்கையில் இறைவனைத் தரிசித்தவர் அவர்! இயற்கையை வியக்கும் எவரும் இறைவனைக் காணலாம் என்பதை விளக்க வந்தவர் அவர்! இயற்கை எவரையும் தனியாய்ப் பிரிக்கவில்லை! பிரித்தவன் மனிதன் தான் என்பதை உணர்ந்தவர் அவர்! கலை உரைத்த  கற்பனைகள் நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கங்களை மண்மூட வேண்டும்   என்று கடுமை காட்டியவர் அவர்! அவர்போல் ஒருவர் வழி காட்டினால் போதும்! நம்மைப் போன்றவர்கள் நடந்து காட்டலாம்! நல்லவர்களே  ..வாருங்கள்! வல்லவர் வள்ளலாரின் வழியில் வாழ்ந்து காட்டுவோம்!

அருட்பாவால் ஆண்டவர்!

நாம் வள்ளல் என்று ஒருவரைச் சொன்னால் அவரிடம் கையேந்துகிறோம் என்று பொருள்! ஆம்.. வள்ளலாரிடம் நாம் கையேந்துகிறோம்..! எதற்காக..! பொருள் வேண்டும் என்பதற்காக அன்று! அருள் வேண்டும் என்பதற்காக! அதுவும் நாம் மட்டுமே  வாழ அன்று! நம்மைச் சார்ந்தவர்களும் - நம்மைச் சார்ந்து வாழும் பிற உயிர்களும் சமத்துவமாய் வாழ! அவரது வழியில் நின்று ஆன்ம நேயம் சூழ! அவரது வழியில் நிற்கவும் அவர் அருள் வேண்டும்! அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டவர்! எம்மை அருட்பாவால் ஆண்டவர்! ஆகவே அவரிடம் கையேந்துவோம்! அவர் துணையோடு ஆன்ம நேய ஜோதியை ஏந்துவோம்    !    

சமயம் கடந்த ஞானி!

  வள்ளலாருக்கு முன்பும் அருளாளர்கள் இருந்தனர்.      பக்திப் பனுவல்கள் புனைந்தனர்.      பாடல்கள் இசைத்தனர்.      பலதலம் சென்றனர்.      பயணம் செய்தனர்.      பரிவாய் நடந்தனர்.     ஆனாலும் ..      வள்ளல் பெருமான் அவர்களிலும் பெரிதும்  மாறுபட்டவர்.      அவர்களில் பெரும்பாலோர் உபதேசித்தனர்.      பெருமான் செயலில் இறங்கினார்.      அவர்கள் அடியார்கள் சிலருக்கு  உணவு தந்தனர்.     பெருமான்.. பசித்திருப்பவர்கள் அனைவருக்கும்     உணவு படைக்கவேண்டும் என்று துடித்தார்.    பசிக் கொடுமையை எவரும் விரித்துரைக்க முடியாத அளவுக்கு விரிவுரை செய்து அதைப் போக்குவதே முதல் பணியாகக் கொண்டார்!    ஞான சபைக்குள்ளே புறவினத்தார் --அதாவது புலால் உண்பவர் நுழையக் கூடாது என்று விதித்தவர் --     சாலைக்குள்ளே அந்தக் கட்டுப்பாடு கிடையாது :     எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று மனித நேய விதி செய்தார்.     இரைப்பையை நிரப்பி விட்டுத்தான் இதயத்தோடு பேச வேண்டும் என்பது  வள்ளல் பெருமானின் சன்மார்க்கச் சட்டம்.     அதை நிறைவேற்றவேண்டிய  பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதில் மதமோ சாதியோ குறுக்கிடவே முடிய

அன்பு காட்டுவோம் வாருங்கள்!

     இந்த நூற்றாண்டில்கூட பேச முடியாத புரட்சிச் சிந்தனைகளை அந்த நூற்றாண்டில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தவர் வள்ளலார். அனைத்து உயிர்களிடத்திலும் அன்புசெய்தல் என்பது அவர்தம் உயிர்க் கொள்கை.           வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று நெஞ்சார நெகிழ்ந்தார் அவர்.            பயிரைக் கண்டுதான் வாடினாரா..? களையைக் கண்டு வாடவில்லையா ?அதுவும் உயிர்தானே என்றார்-ஒரு நண்பர்.             நமக்குத்தான் பயிர்,களை என்ற வேறுபாடெல்லாம் !அவருக்கு எல்லாமே ஒன்றுதான் !அதுவாடினாலும் அவர் வாடுவார்!     ''ஓடும் செம்பொனும் ஒக்கவே "நோக்கினார் அல்லவா அப்பர் பெருமான்! உழவாரப் பணி செய்யும் போது உடைந்த ஓடுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருந்த அவருக்கு முன் ..பொற்காசுகளும் சிதறிக் கிடந்தன.அவற்றையும் குப்பையாகவே கருதி அவர் தூக்கி எறிய    வில்லையா!அதுபோலத்தான் வள்ளல் பெருமானுக்கு ..பயிராயினும் களையாயினும் ஒன்றுதான்!      "பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலேன் நான் !          படைத்த அப் பணங்களைப் பலகால் கிணற்றில் எறிந்தேன்  ;          குளத்திலும் எறிந்தேன்! கேணியில் எறிந்தனன் எந்தாய்!"-என்று